செல்லாததானது சாய்ந்தமருது;சிறிலங்கா அமைச்சரவை தீர்மானம்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து சாய்ந்தமருதிற்கு தனியான நகரசபை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தாார்.

நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, கடந்த 15 ஆம் திகதி சாய்ந்தமருதினை தனியான நகர சபையாக அறிவித்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.