பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சீனா நிற்கும்- சீன வெளிவிவகார அமைச்சர்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சீனா என்றும் நிற்கும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.யேர்மனிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சீனாவின் மனித உரிமை செயற்பாடுகள் குறித்து அனைத்துலக சமூகம் தெரிவித்து வரும் கருத்துக்களை நாம் மறுக்கின்றோம், சில நாடுகள் கொரோனா வைரஸ் குறித்து அளவுக்கு அதிகமான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

வைரஸ் எமக்கு சவாலாக இருந்த போதும், அதனை தற்போது நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். எமக்கு உதவிய நாடுகளுக்கு நாம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாம் பாலஸ்தீன மக்களுக்கும், உலகில் ஒடுக்கப்படும் ஏனைய மக்களுக்கும் ஆதரவாக எப்போதும் நிற்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.