அனோஜனுக்கு கருணை காட்டுமாறு சவூதி அதிகாரிகளிடம் அலி சப்ரி கோரிக்கை

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு கருணை காட்டுமாறு சவூதி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஆட்சேபனைக்குரிய கருத்துக்காக முதலில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அது மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தக் கருத்தை சில நிமிடங்களில் நீக்கி, பகிரங்கமாக மன்னிப்புக் கோரியதாக தெரிவிக்கப்படும் நிலையில், அனோஜனுக்கு மனந்திரும்பி தனது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.