கென்யாவின் காஜியாடோ பகுதியில் அமைந்துள்ள மகோடி ஏரியில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வந்த அனைத்துச் செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்துமாறு அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார்.
100 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு இயங்கி வரும் இந்திய நிறுவனமான டாடா, அப்பகுதிக்குத் தேவையான தொழிற்சாலைகளையோ, வேலைவாய்ப்புகளையோ அல்லது உள்கட்டமைப்பு வளர்ச்சியையோ வழங்கத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காஜியாடோ பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பயணத்தின் போது பேசிய அதிபர் ரூட்டோ, “டாடா நிறுவனம் 100 ஆண்டுகளாக கென்யாவுடன் ஒப்பந்தம் வைத்துள்ளது. ஆனால், காஜியாடோவில் அவர்கள் எந்தவொரு தொழிற்சாலையையும் கட்டவில்லை.



