இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக, தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்பின் போது, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், அதிகாரப் பகிர்வு, வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்தி, நல்லிணக்கம் மற்றும் நீடித்த அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.



