புதிய நோய்: ஒரே மாதத்தில் 15 யானைகள் உயிரிழப்பு

கென்யாவின் அம்போசெலி (Amboseli) சூழல் மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 15 யானைகள் உயி ரிழந்துள்ளன. ஆரம்பக்கட்ட ஆய்வகப் பரிசோதனைகள் ஏதோ ஒரு நச்சுப் பொருள் காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக் காட்டுவதாக, கென்யா வனவிலங்கு சேவையை (KWS) மேற்கோள் காட்டி உள் ளூர் ஊடகங்கள் புதன்கிழமை(29) செய்தி வெளியிட்டுள்ளன.
அம்போசெலி தேசிய பூங்கா, கிமானா சரணாலயம் மற்றும் குக்கு பண்ணை (Kuku Ranch) ஆகிய பகுதிகளில் ஜூன் 24 முதல் ஜூலை 24 வரையிலான காலகட்டத்தில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக ‘தி ஸ்டார்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்த யானைகளில் பத்து யானைகளுக்கு இறப்பதற்கு முன் ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்பட்டன; குறிப்பாக, அவற்றால் எழுந்து நிற்க முடியாத வகையிலான பகுதி அளவு பக்கவாதம் (partial paralysis) ஏற்பட்டது. நோய் அறிகுறிகள் தொடங்கிய ஒன்று முதல் இரண்டு நாட்களுக்குள் அவை உயிரிழந்தன. மீதமுள்ள ஐந்து யானைகளின் உடல்கள் மிகவும் சிதைந்த நிலையிலோ அல்லது விலங்குகளால் உண்ணப்பட்ட நிலையிலோ காணப்பட்டதால், கால்நடை மருத்துவர்களால் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை.
KWS-இன் தகவலின்படி, “இந்த பாதிப்பு முக்கியமாக வயது வந்த பெண் யானைகளையும் அவற்றின் குட்டி களையும் பாதித்துள்ளது; பாதிக்கப்பட்டவற்றில் ஒரே ஒரு வயது வந்த ஆண் யானை மட்டுமே இருந்தது.”
பாதிக்கப்பட்ட பல யானைகளிடமிருந்து சேகரிக் கப்பட்ட மாதிரிகளில் சாத்தியமான நச்சுப் பொருள் ஒன்று கண்டறியப்பட்டதாக நைரோபி பல்கலைக்கழகத்தின் ஆரம்பக்கட்ட ஆய்வக முடிவுகள் தெரிவிப்பதாக KWS கூறியதை Kenyans.co.ke மேற்கோள் காட்டியுள்ளது.