பொருட்களின் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மின்சார கட்டணம் அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு ஆகியவற்றை கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் இன்று (25) வியாழக்கிழமை மருதானையில் எதிர்ப்புப் பேரணியை முன்னெடுத்தது.
இப்பேரணியில் முன்னிலை சோசலிசக் கட்சி, பெண்கள் இயக்கம், இளைஞர் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட கூட்டணி அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்துள்ள ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.



