ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

ஈ​ரானுட​னான ஒப்​பந்​தம் இறு​தி​யானது அல்ல. ஒழுங்​காக நடந்துகொள்​ளா​விட்​டால் அந்த நாட்​டின் மீது மீண்​டும் குண்டு மழை பொழி​வோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தம் இறுதி செய்யப்பட்​டுள்​ளது. நாளை சுவிட்​சர்​லாந்​தின் ஜெனீவா நகரில் ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்நிலை​யில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடை​பெறும் ஜி7 உச்சிமாநாட்​டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்​கேற்​றுள்​ளார்.

பிரான்​சில் கால் பதித்​தது முதலே ஈரானுட​னான தனது ஒப்பந்தத்தைப் பற்​றிப் பெரு​மை​யாகப் பேசி வரும் ட்ரம்ப், சில ‘முட்​டாள் மனிதர்​கள்’ பரிந்​துரைத்த ‘உல​களா​விய அழுத்​தத்​தை’ தான் தடுத்து நிறுத்​தி​ய​தாக உரிமை கோரி​னார். ஆனால், முட்டாள் யார் என்​பதை தெரிவிக்​க​வில்​லை.

இந்​நிலை​யில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று கூறும்​போது, ‘‘ஈரானுட​னான ஒப்​பந்​தம் இறு​தி​யானதல்ல. இது ஒரு புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மட்டுமே. இது எனக்​குப் பிடிக்​க​வில்லை என்​றாலோ அல்​லது அவர்கள் (ஈரான்) ஒழுங்​காக நடந்து கொள்​ள​வில்லை என்றாலோ, நாங்​கள் மீண்​டும் அவர்​களின் தலைக்கு நேராக குண்​டு​களை வீசத் தொடங்​கி​விடு​வோம். ஏனென்​றால் அவர்​கள் கடந்த 47 ஆண்​டு​களாகத் தவறாகவே நடந்து கொண்​டுள்​ளனர்’’ என்​றார்.

ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கெனவே ஓரளவு திறக்கப்பட்டுவிட்டது என்றும், அடுத்த ஒன்று அல்லது 2 நாளில் அது முழுமையாகத் திறக்கப்பட உள்ளது என்றும் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.