விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது – ஆனந்த விஜேபால

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சபையில் அவர் மேலும் கூறுகையில்,

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இருப்பினும் யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கான உரிமை காணப்படுகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் பாடலுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி இளைஞன் தொடர்பில் பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபருடன் இன்று கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னர் சாதகமான தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.