இணையத்தள சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடி குறித்து சீனத் தூதரகம் எச்சரிக்கை

இந்த ஆண்டு தொடக்கம் முதல், இலங்கையில் இணையத்தள சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடி மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனைத் தடுக்கும் வகையில் சீனா மற்றும் இலங்கை இடையிலான சட்ட அமுலாக்க ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள சீனத் தூதரகம் இலங்கை  காவல் துறை பல இடங்களில் மேற்கொண்ட சோதனைகளில் சூதாட்டம் மற்றும் மோசடி மையங்கள் உடைக்கப்பட்டு, பல வெளிநாட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் சில சீன குடிமக்களும் சட்டப்படி சீனாவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இத்தகைய குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், இலங்கையின் சர்வதேச நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், பொது பாதுகாப்பு, சமூக நிலைத்தன்மை மற்றும் நிதி அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சீனா எச்சரித்துள்ளது.