இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் மற்றும் இலங்கை பாதுகாப்புச் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யா கொந்தா இடையே முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பு செவ்வாய்க்கிழமை (19) பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து சுமூகமான கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும், இந்த அமர்வில் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இந்திய உயர் ஆணையகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.



