அமெரிக்க-இஸ்ரேல் போரை பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் கண்டிக்க வேண்டும் – அராக்சி

பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஈரானைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக, அராக்சி புதன்கிழமை(13) புதுதில்லி வந்தடைந்தார். இந்த முக்கியக் கூட்டத்திற்கு முன்பு, பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் தங்கள் முன்னுரிமைகளை ஒருங்கிணைக் கவும், தீவிரமடைந்து வரும் பிராந்தியப் பதற்றங்களைச் சமாளிக்கவும் முயன்று வரும் நிலையில், அராக்சியின் வருகை ஈரானின் ராஜதந்திர ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. செப்டம்பர் மாதம் புதுதில்லி நடத்தவிருக்கும் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு முன் னோட்டமாக, பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை இந்தியா வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்துகிறது.
சீனத் தலைவர் ஷி ஜின்பிங்குடன் அதிபர் ட்ரம்ப் பெய்ஜிங்கிற்கு மேற்கொள்ளும் மூன்று நாள் அரசுப் பயணத்துடன் ஒத்துப்போகிறது. பிரிக்ஸ் என்பது, சர்வதேச அமைப்பு களிலும், பாரம்பரி யமாக மேற்கத்திய நாடுகள் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரச்சினைகளிலும், உலகத் தெற்கின் கோரிக்கை களை வலுப்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை ஒருங்கிணைக்க முயலும் முக்கிய வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் ஒரு கூட்டமைப்பாகும்.
“சர்வதேச உறவுகளில் கணிசமான மாற்றங்கள், தொடர்ச்சியான மோதல்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் நிலவும் ஒரு காலகட்டத்தில் நாம் சந்திக்கி றோம்,” என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தனது தொடக்க உரையில் கூறினார். பின்னர் அவர் ஹோர்முஸ் ஜலசந்தியின் நிலைமை குறித்துப் பேசுகையில், அந்த நீர்வழிப்பாதை வழியாக “பாதுகாப்பான, தடையற்ற கடல்வழிப் போக்குவரத்து” உலகப் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.
அதேசமயம், பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் வியாழக்கிழமை(14) உரையாற்றிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஈரான் மீதான அமெரிக்க- இஸ்ரேல் போரை அனைத்து உறுப்பு நாடுக ளும் நிபந்தனையற்ற முறையில் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.