மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவுதினமான இன்று திங்கட்கிழமை (18) மன்னாரிலும் நினைவேந்தல் நடைபெற்றது.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் தலைமையில் இன்று காலை மன்னார் நகர பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலைக்கு முன்பாக நினைவேந்தல் நடைபெற்றது.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.

இந்நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா, அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் பகுப்பாய்வு