ஈரானை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜஜாத் Mahmoud Ahmadinejad பலியாகியுள்ளார்.
சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானின் நர்மக் பகுதியில் உள்ள அவரது வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவரும் அவரது பல பாதுகாப்புப் படையினரும் பலியாகியுள்ளனர்.
அதேவேளை, ஈரான்மீதான தாக்குதலை சீனா, ரஷ்யா, வடகொரியா உள்ளிட்ட நட்பு நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை அவசியம் என அரபுலகக் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.



