தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்தமை தொடர்பாக வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காகவே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



