இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நெதர்லாந்து

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் வீபே டி போயர் (Wiebe De Boer) பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சுமுகமான, ஆக்கபூர்வமான சூழலில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், கூட்டாண்மைக்கான புதிய வழிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இரு தரப்பினரும், தொடர்ச்சியான உரையாடலுக்கான தங்கள் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பில் நெதர்லாந்தின் துணைத் தூதுவர் இவான் ருட்ஜென்ஸும் (Iwan Rutjens) கலந்து கொண்டார்.