ஜனவரி மாதம் முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரித்து வழங்கப்படும் என பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி, ஜனாதிபதியின் தலையீட்டுடன் அவர்களது சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததற்கமைய இந்த செயற்பாடு நடைபெறவுள்ளதாக பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
கொடக்கவெல பகுதியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.



