யாழ்ப்பாணம் கோட்டையைச் சுற்றி எல்லைக்கற்கள் நடுகை செய்யும் பணி தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (21) நடைபெற்றது.
தொல்பொருள் திணைக்களத்தால் எல்லைக் கற்கள் நடுகை செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இடைநிறுத்தப்பட்டிருந்தமை தொடர்பில் கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டது.
தொல்பொருள் திணைக்களம், யாழ். மாநகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து எஞ்சிய எல்லைக் கற்களை நடும் பணி முன்னெடுக்கம் என இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர், காணி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், யாழ். மாநகர சபையின் பொறியியலாளர், தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.