கரூரில் பெருந்துயரம்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி !

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

விஜய் இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 27, 2025)  கரூர் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து உரையாற்றியபோது, கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். இது கரூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 27) கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்திற்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 31 பேர் உயிரிழந்ததாகக்கூறப்படுகின்றது.