ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இரண்டு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளும் அவர், அதைத் தொடர்ந்து ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை அவர் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதி செப்டம்பர் 23ஆம் திகதி அமெரிக்காவுக்குச் செல்வார், மேலும் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார்.
பொதுச் சபையின் கூட்டத்துக்கு மேலதிகமாக அவர் பல உலகத் தலைவர்களையும் சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நியூயோர்க்கிலிருந்து, செப்டம்பர் 27ஆம் திகதி ஜப்பானின் ஒசாகாவுக்குச் செல்லும் ஜனாதிபதி, அங்கு அவர் எக்ஸ்போ 2025 இல் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.