ஹபரணையில் ஆலயமொன்றை மறித்து கட்டப்பட்ட பேருந்து நிலையம் – தமிழ் மக்கள் எதிர்ப்பு

ஹபரணையில் இந்து ஆலயமொன்றின் முன்பகுதி உடைக்கப்பட்டு பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளமைக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறித்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதனால் பக்தர்கள் ஆலயத்துக்குள் செல்லும் வழியும் மறிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக தடுப்பு சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன் கடும் எதிர்ப்பையும் தூண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையினரின் ஆதிக்க போக்கால் சிறுபான்மையினர் அடக்குமுறைக்குள்ளாகுவதாகவும் சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரபூர்வ விளக்கம் வழங்குமாறு அரசாங்கத்தையும், உள்ளூராட்சி அதிகாரிகளையும் மக்கள் கேட்டுள்ளனர்.