இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மா நிலமான தமிழ் நாடு- இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று வியாழக்கிழமை (5) இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை (4) காலை மீன் பிடிக்க வந்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தபோதே தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களும் இழுவைப் படகுகளும் தலைமன்னார் கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அந்த மீனவர்களிடம் தலைமன்னார் கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்விசாரணைகளின் பின்னர், மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.