லெபனானைத் தொடர்ந்து காசாவிலும் விரைவில் போர் நிறுத்தம்: அமெரிக்கா நம்பிக்கை

காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் காசா மீது போர் நடத்தி வருகிறது. காசா பகுதி​யில் இதுவரை 44,282 பேர் உயிரிழந்​துள்ளனர். ஒரு இலட்சத்​துக்​கும் மேற்​பட்​டோர் படுகாயம் அடைந்​துள்ளனர். இந்த சூழலில் எகிப்து அரசின் சமரசத்​தின் ​பேரில் இஸ்ரேல் – காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்​தத்தை ஏற்படுத்த தீவிர முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு வருகிறது.

இதுகுறித்து அமெரிக்க அரசு வட்​டாரங்​கள் கூறும்​போது, “தற்​போதைய அமெரிக்க அ​திபர் ஜோ பைடனின் பதவிக் ​காலம் வரும் ஜனவரி​யில் முடிவடைகிறது. அதற்​குள் ​காசா​வில் ​போர் நிறுத்​தம் அமலாகும். இதுதொடர்​பாக இஸ்​ரேல்​ அரசு – ​காசா நிர்​வாகம்​ இடையே ​விரை​வில்​ ஒப்​பந்​தம்​ கையெழுத்​தாகும்​” என்​று தெரி​வித்துள்ளன.