பாக்கிஸ்தானில் தொடரூந்தில் தீவிபத்து குறைந்தது 65 பேர் பலி

பாகிஸ்தானின், லியாகத்ப்பூர் நகருக்கருகே இன்று காலை ஓடும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் தொகை 65 ஆக உயர்வடைந்துள்ளது.

பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்றுக் கொண்டிருந்த தாஜ் ஜெம் எக்ஸ்பிரஸ் ரயிலொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சமையில் எரிவாயு வெடிதத்தினால் உண்டான தீயாணது ரயிலில் மூன்று பெட்டிகளுக்கு பரவியதாக கூறப்படுகின்றது.

இதன்போது சிலர் எரியும் ரயிலில் இருந்து தப்பிக்க வெளியே குதித்தமையினால் உயிரிழந்ததாகவும் மேலும் பலர்  தீயில் கருகி உயிரிழந்தாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் சிலரது நிலைமைகள் கவலைக்கிடமாகவுள்ளமையினால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.