இலங்கையுடன் நட்பை வளர்ப்பதே இந்தியாவின் நோக்கம் – இந்திய தூதுவர்

இலங்கைக்கும் – இந்தியாவுக்குமிடையிலான சிறப்பான நட்பை மேலும் வளர்ப்பதே இந்தியாவின் பிரதான நோக்கம் என இலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இந்தியவின் புதிய தூதுவராக இலங்கை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்காவின் முன் பதவியேற்றபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எரிசக்தி, முதலீடு, வர்த்தகம் உட்பட பல துறைகளில் இலங்கையுடன் உறவுகளை பேண இந்தியா விரும்புகின்றது. அதனை மேலும் விரிவுபடுத்த நாம் தொடர்ந்து செயற்படுவோம் என அவர் தெரிவித்தள்ளார்.

இதனிடையே, முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்திய தூதுவராக பணியாற்றிய சந்தோஷ் இலங்கைக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கையின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.