கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்கவேண்டும்-அமெரிக்கா

கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்கவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் தனது ட்விட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பிரஜைக்கும் கருத்துசுதந்திரத்திற்குள்ள உள்ள உரிமையே ஜனநாயகத்திற்கான முக்கியமான அம்சம்  என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை மீளகட்டியெழுப்பும் ஸ்திரமானதாக்கும்  அனைத்து இலங்கையர்களிற்கும் வளமானதாக்கும்  இலங்கையின் முயற்சிகளிற்கு இந்த அடிப்படை உரிமை பாதுகாக்கப்படுதல் மிகவும் அவசியம் எனவும் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.