90 நாட்கள் விடுப்புக் கோரி மனு அளித்துள்ள நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி, தனக்கு 90 நாட்கள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று உள்துறை செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனக்கு கண்புரை, பல்வலி, இரத்தப் போக்கு போன்ற நோய்கள் இருப்பதாகவும். இதற்காக சித்த, ஆயுள்வேத மருத்துவ சிகிச்சை பெறவேண்டியிருப்பதால், தனக்கு 90 நாட்கள் விடுப்பு தேவைப்படுவதாகவும் கோரி உள்துறை அமைச்சிடம் மனு கையளித்துள்ளார்.

அத்துடன் இவற்றிற்காக தனக்கு சிறையில் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.