77 நாடுகளின் கடன்களை தற்காலிகமாக தள்ளுபடி செய்ய சீனா திட்டம்

தற்போது தோன்றியுள்ள கொரோனா வைரஸ் நெருக்கடிகளினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்ட கடன்களை தற்காலிகமாக தள்ளுபடி செய்வதற்கு சீனா தீர்மானித்துள்ளது.

அபிவிருத்தி அடைந்துவரும் 77 நாடுகளுக்கு வழங்கப்பட்ட கடன்களின் மீள் செலுத்தும் தொகையை தற்காலிகமாக திறுத்திவைப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. உள்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன. சிறீலங்காவும் சீனாவிடம் இருந்து அதிக கடன்களை பெற்றுள்ளதால், அது தற்போது சீனாவுடன் பல சுற்று பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றது.