தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக 6000 மியான்மர் நாட்டவர்கள் கைது

482 Views

6000 மியான்மர் நாட்டவர்கள் கைது

கடந்த இரண்டு மாதங்களில் (ஜனவரி முதல் மார்ச் முதல் வாரம் வரை) தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சுமார் 6000 மியான்மர் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தின் Kanchanaburi, Prachutkirikan மாவட்டங்களில் உள்ள காட்டு பாதைகள் வழியாக இவர்கள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதத்தில் மட்டுமே 5000 மியான்மர் நாட்டவர்கள் தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக தாய்லாந்து ராணுவத்தின் மக்கள் தொடர்புத்துறை தெரிவித்திருக்கிறது.

Leave a Reply