6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டது எதற்காக? பேராயரின் மனு மீது விசாரணை

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும், 6,000 வாள்கள் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக்கோரி, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை, மார்ச் மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்போது, இந்த விடயம் தொடர்பாக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தவேண்டும் என பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன உள்ளிட்ட குறித்த மனுவின்பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள பாதுகாப்புப் பிரிவின் பிரதானிகளுக்கு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.