மத்திய தரைக்கடலில் அகதிகள் சென்ற படகு விபத்து – 40 பேர் உயிரிழப்பு

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு படகில் புறப்பட்டுள்ளனர். அகதிகள் சென்ற படகு மத்திய தரைக்கடலில் துனிசியா நாட்டின் மஹ்தியா நகர் அருகே சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளனது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த துனிசியா கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த படகு விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிப்பு.