4 தமிழக மீனவர்களை கொன்ற இலங்கைப் படையினரை கைது செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழக மீனவர்கள் 4 பேரை கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெய் சுகின் என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்துவதை தடுக்க உத்தரவிட மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவர்களின் படகு உள்ளிட்ட உடைமைகளை காக்கவும், உரிய உத்தரவு பிறப்பிக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 கோடி இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டு தொகையை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத்தர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.

ஜனவரி 18ஆம் திகதி இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.