392 ஜெலக்னைட் வெடிமருந்துக் குச்சிகள்,1500 வெடிப்பிகள் – காத்தான்குடி  முகாமில் கண்டுபிடிப்பு

ஒல்லிக்குளம் இஸ்லாமிய பயங்கரவாத முகாமில் புடித்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள்,ஜெலக்னைட் வெடிமருந்துக் குச்சிகள் வாள்கள், வெடிப்பிகள் உட்பட பெருமளவு வெடிபொருட்கள் நேற்று (27) குற்றப் புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் தொடர்புடைய இரண்டாவது நிலைத்த தலைவர் முகமட் மில்கான் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட் டார். இவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது பெருவளவான வெடிபொருட்கள் ஒல்லிக்குளம் முகாமில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.F3543295 E936 4894 903B CC22C4CB4775  392 ஜெலக்னைட் வெடிமருந்துக் குச்சிகள்,1500 வெடிப்பிகள் - காத்தான்குடி  முகாமில் கண்டுபிடிப்பு

இதனை அடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ஜெலக்னைட் வெடிமருந்துக் குச்சிகள், வெடிப்பிகள், 184 யார் நீளமான வெடிப்பதிர்வு கடத்தி, Ak மற்றும் m 16 வகைத் சுரிகுழல் துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் , சவூதி அரேபிய வாள்கள் போன்றவை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன