கிளிநொச்சி, யாழ் மாவட்டங்களில் 36,000 மக்கள் காணியற்றவர்கள்

காணிகள் அற்ற தமிழ் மக்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்து வருவதாகவும், கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களில் அதன் எண்ணிக்கை 36,000 ஆகும் என யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்கா அரசும் அதன் படையினரும் தமிழ் மக்களின் காணிகளை பலவந்தமாக அபகரித்து வருவதே இதற்கான பிரதான காரணம் என கூறப்படுகின்றது. தமிழ் மக்களின் காணிகளில் மேற்கொள்ளப்படும் பலவந்த சிங்களக் குடியேற்றங்கள், அத்துமீறி அமைக்கப்படும் பௌத்த ஆலயங்கள், படைமுகாம்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் என்பவையே தற்போதைய நெருக்கடிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.