இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 230 ஈரானிய கடற்படையினருக்கு, 30 நாள் சலுகை நுழைவீசா வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.ஆர்.ஐ.எஸ்.டேனா என்ற கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்த பின்னர், மீட்கப்பட்ட 32 ஈரானிய கடற்படையினரும், இரண்டாவது ஈரானிய கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ் புஷேரில் இருந்த 208 பேரும் இந்தக் குழுவில் அடங்கியுள்ளனர்.
இவர்களுக்கு நுழை வீசா வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளுக்காக நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் கோரப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஈரானிய குழுவிற்கு தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், கொழும்பில் உள்ள ஈரானிய தூதரகத்திடமும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய அனைத்துலக சட்டங்களின்படி, அவர்களைத் திருப்பி அனுப்பப்படுவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.



