22ஆவது அரசமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு – பறிபோகும் பொலிஸ் அதிகாரம்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

தனிநபர் பிரேரணையாக அவர் இதனை முன்வைத்துள்ளார். மாகாண சபைகளில் இருந்து காவல்துறை அதிகாரங்களை நீக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரங்களை நீக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.