20வது திருத்தத்திற்கு எதிராக விளக்கு அணைத்துப் போராட்டம்

20வது திருத்தத்திற்கு எதிராக விளக்கு அணைத்து, தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் போராட்டம் ஒன்றை  இளைஞர்கள் முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் இராசமாணிக்கம் இல்லத்தில் ஒன்றுகூடிய இளைஞர்கள் 20வது திருத்த சட்டத்திற்கு எதிராக  நேற்று இரவு 8.00மணிக்கு விளக்குகளை அணைத்து மெழுகு திரிகளை கைகளில் ஏந்தி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

20வது திருத்த சட்டம் என்பது தமிழ் மக்களை இந்த நாட்டில் குழிதோண்டி புதைக்கும் சட்டம் எனவும் அதற்கு எதிராக சிறுபான்மை கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவேண்டும் எனவும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.