தமிழகத்திற்கு செல்ல முயன்ற திருகோணமலையை சேர்ந்த 14 பேர் கைது

தமிழகத்திற்கு செல்ல முயன்ற 14 பேர் கைது

தமிழகத்திற்கு செல்ல முயன்ற 14 பேர் கைது

தமிழகத்திற்கு கடல்வழியாக தப்பிச் செல்ல முற்பட்ட திருகோணமலையை சேர்ந்த 12 பேர் உட்பட 14 பேர் இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து இவ்வாறு 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையை சேர்ந்த 3 குடும்பங்களை சேர்ந்த 12 பேர் தமிழ்நாடு செல்லும் நோக்கில் மன்னார் தாழ்வுபாடு பகுதிக்கு பயணித்துள்ளனர். அவர்களை தாழ்வுபாடு பகுதியை சேர்ந்த இருவர் படகு மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்துச் செல்லமுற்பட்டபோதே கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் தாழ்வுபாடு கடற்பகுதியில் வைத்து இன்று புதன் கிழமை அதிகாலை இலங்கை கடற்படையினரால் குறித்த 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7 சிறுவர்கள், 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என 3 குடும்பத்தை சேர்ந்த 12 பேரும் படகோட்டிகள் இருவருமாக கைது செய்யப்பட்டுள்ள 14 பேரும் இன்று காலையில் மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 பேரிடமும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

அதன்பின்னர் மன்னார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tamil News