11 கொரோனா மரணங்கள் நேற்று பதிவு

இலங்கையில் நேற்று மட்டும் 11 கொரோனா தொற்றாளர்கள் மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் ஒரே நாளில் அதிகளவு கொரோனா மரணங்கள் பதியப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. இதன் மூலம் இலங்கையில் கொரோனாவினால் மரணமடைநதவர்களின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது.