வைத்தியம் பாக்க்கச் சென்ற மகளை வன்புணர்வு செய்த மருத்துவருக்கு எதிராக தந்தை ஆர்ப்பாட்டம்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தனது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட மருத்துவர் தண்டிக்கப்பட்டு மகளின் படுகொலைக்கு நீதி வேண்டும் என தந்தை ஒருவர் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்திக்கு அருகில் தனது மகளின் புகைப்படங்களுடன் இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் குறித்த தந்தை ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

திடீர் மனநலப் பாதிப்புக்குள்ளான தனது மகள் கடந்த-2017 ஆம் ஆண்டில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் அங்கொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு ஒரு வைத்தியரும் மூன்று தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளனர்.

இதன் பின்னர் உண்மை வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக எனது மகளின் உடலுக்கு ஊசியேற்றியுள்ளனர். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு மே மாதம்-31 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். எனது மகள் இறந்து பல நாட்களின் பின்னரே இந்த விடயம் எமக்குத் தெரிய வந்தது.

மகளின் உயிரற்ற உடலை எம்மிடம் கையளிக்கும் போது அவரது உடலிலிருந்து சிறுநீரகம் உள்ளிட்ட பகுதிகள் எங்களின் அனுமதியின்றி எடுக்கப்பட்டிருந்தன.

எனது மகளுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடந்த கொடுமைகள் தொடர்பில் நான் முன்னாள் ஜனாதிபதி , முன்னாள் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தேன். எனினும், இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

எனது மகளின் மரணத்துக்கு நல்லாட்சியில் தீர்வு கிடைக்கவில்லை. ஆனால், தற்போதைய நேர்மையான ஆட்சியிலாவது நீதி கிடைக்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.