வெளிநாட்டு மீனவர்களுக்கு கோத்தபயா ராஜபக்ஸ எச்சரிக்கை

வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழையக்கூடாது என சிறீலங்கா அதிபர் கோத்தபயா ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் முதன்முறையாக பாராளுமன்றம் கூடிய போது, உரையாற்றிய கோத்தபயா ராஜபக்ஸ, தங்கள் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு மீன்களை சந்தைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

வெளிநாட்டு மீனவர்கள் உரிய அனுமதி இல்லாமல் இலங்கைக் கடற்பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.