விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை- ரம்புக்வெல

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னைக் கடுந்தொனியில் இழிவாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு திட்டினார் என்றும், அதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸ குற்றம் சுமத்தியிருந்தார்.

இதையடுத்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை விஜயதாச ராஜபக்ச விமர்சித்தார் என்ற அடிப்படையிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அமைச்சர்  ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விவகாரங்களை கையாள்வதற்கு பொதுஜனபெரமுனவிற்கு ஒரு முறையுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த முறையை பின்பற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

விஜயதாச ராஜபக்சவின் அரசியல் வரலாறும் நடத்தைகளும் மக்கள் நன்கு அறிந்த விடயம் என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.