விக்கியின் கூட்டணியால் கூட்டமைப்புக்கும் முன்னணிக்கும் தலையிடி: சுரேஷ்

மாற்று அணி உருவாக்கத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தலைவலியைச் சந்தித்துள்ளன என ஈ.பி.ஆர். எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் -கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் வழங்கிய ஆணைகளில் இருந்து விலகி, வேறு வழியில் தடம்மாறி சென்றதன் காரணமாகவே, புதிய கூட்டணி உருவாகியது. புதிய கூட்டணி மூலம், தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் களம் அமைத்துள்ளோம்” என்றார்.