பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருமானம் தரும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கோடு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கமானது நான்கு குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒன்றரை இலட்சம் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரம், குழாய்கள் மற்றும் தூவல் நீர் பாசனக் கருவிகளை இம்மாதத்தில் இரண்டாவது முறையாக இன்று வழங்கியது.
இவற்றை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் அவர்கள் திருகோணமலையில் வைத்து வழங்கி வைத்தார்.