வாள்களுடன் இளைஞர் கைது

திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் வாள்களுடன் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்

பாற்பண்ணை அம்மன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் 3 புதிய வாள்களை மறைத்து வைத்துள்ளதாக புலனாய்வு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

0?ui=2&ik=c2578b0749&attid=0.1 வாள்களுடன் இளைஞர் கைது

அதனடிப்படையில் இன்று நண்பகல் குறித்த வீட்டுக்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் தேடுதல் மேற்கொண்டனர். இதன் போது 3 வாள்களை மீட்டதுடன் 21 வயதுடைய இளைஞரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

வடக்கில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் நிலையிலும் இவ்வாறான சம்பவங்கள் நடப்பதன் பின்னணி குறித்து மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியமாகின்றது.