வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயமாகியுள்ளது

வவுனியா சாந்தசோலை உப வீதி பூந்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் விசமிகளால் இன்று உடைக்கப்பட்டு சொரூபம் தூக்கிசெல்லப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில் இச்செயற்பாடானது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் விசனம் தெரிவிப்பதுடன் மது போதையில் இது செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு முறைப்பாடு வழங்கி நடவடிக்கை எடுக்க உள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.