வவுனியா செட்டிகுளத்தில் இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இருவர் படுகாயம்.

வவுனியா சின்னசிப்பிக்குளம் பகுதியில் இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 9.50 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா செட்டிகுளம் சின்னச்சிப்பிகுளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் ஹயசிங்கபுர இராணுவ முகாம் நோக்கி‌ சென்றுகொண்டிருந்த ஹன்டர் வாகனத்தின் பின்பாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

IMG 1c2030a4c84709274d5f3334f91ea080 V வவுனியா செட்டிகுளத்தில் இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இருவர் படுகாயம்.

IMG 05c8046869c5b1b4b2b151d0d19c279d V வவுனியா செட்டிகுளத்தில் இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இருவர் படுகாயம்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சின்னசிப்பிகுளத்தை சேர்ந்த நௌபர் மிர்ஷட் (24வயது), அப்துல் ஜக்பர் ஜூவான் (22 வயது) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு நௌபர் மிர்ஷட்‌ என்ற இளைஞன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.