வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

வவுனியா வைரவபுளியங்குளம் குளக்கட்டு வீதி பகுதியில் வசித்த 75 வயதுடைய வயோதிப பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (23.12) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிப பெண் சகோதரனின் வீட்டில் வசித்து வந்ததாகவும் நேற்று சகோதரன் காணியை பார்ப்பதற்றாக சென்றிருந்தார்.

இன்று காலை அயல் வீட்டுக்காரருக்கு அழைப்பை ஏற்படுத்திய சகோதரர் தன்னுடைய அக்கா வீட்டில் இருக்கிறார். அவருக்கு காலை உணவு வேண்டி கொடுக்குமாறு கூறியதையடுத்து அங்கு சென்ற இளைஞன் வீட்டினுள்ளே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதனை அவதானித்துள்ளார்.

பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் பொன்னம்பலம் செல்லம்மா வயது 75 என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாருடன் இணைந்து தடயவியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.