வவுனியாவில் கிணற்றிலிருந்து ஒரு வயது குழந்தையின் சடலம் மீட்பு

வவுனியா – அம்மிவைத்தான் கிராமத்தில் ஒரு வயது பெண் குழந்தை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

காணாமல்போயிருந்த நிலையில் குழந்தையை, வீட்டார் மற்றும் அயலவர்கள் இணைந்து தேடியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் குழந்தையின் சடலம் அவர்களது வீட்டுக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது குழந்தையின் வாய் மற்றும் கண் பகுதியில் இரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.