வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரிக்கை கேலி கூத்தாக இருக்க முடியாது. அருட்தந்தை வி.பி.மங்களநேசன்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரிக்கை கேலி கூத்தாக இருக்க முடியாது. அதற்காகவே நாம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஒரு சர்வதேச விசாரணையினை கோருகிறோம் என நீதிக்கும் சமாதானத்திற்குமான ஆணைக்குழுவின் அருட்தந்தை வி.பி.மங்களநேசன் அடிகளார் கூறியிருக்கின்றாா்.

மேற்படி விடயம் தொடா்பாக யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

கடந் த 3 வருடங்களாக 8 மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கின்றாா்கள். ஆனால் எந்தவொரு நீதியும் கிடைக்கவில்லை.

மாறாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் மண்ணுக்குள் தோண்டி எடுக்கவேண்டும் எனவும், வெளிநாட்டில் உள்ளாா்கள் எனவும், இறந்துவிட் டாா்கள் எனவும் அரசாங்கம் கருத்துக்களை கூறிக்கொண்டிருக்கிறாா்கள்.

எவாிடம் ஒப்படைத்தோம், எந்த இடத்தில் ஒப்படைத்தோம், எப்போது ஒப்படைத்தோம் என கூறுவதற்கு சாட்சிகள் உள்ள நிலையில் நீதி கோாி தொடா்ந்தும் போராட்டம் நடாத்துவோம்.

ஆனால் உள்ளக விசாரணை ஊடாக எமக்கு தீா்வு வழங்கப்ப டாது. அதில் நாம் மிக தெளிவாக இருக்கிறோம். உள்ளக விசாரணை மீது நமக்கு நம்பிக்கை இல்லாமைக்கு நிறையவே அனுபவங்கள் உள்ளன.

குறிப்பாக திருகோணமலை 5 மாணவா்கள் கொலை, கொழும்பில் 11 போ் கடத்தல் உ ள்ளிட்ட பல சம்பவங்களில் உள்ளக விசாரணை ஊடாக என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தொியும். அதனை சொல்லி புாிய வைக்கவேண்டிய அவசியம் கிடையாது.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேலி கூத்தாக இருக்க முடியாது. எனவே எமக்கு சா்வதேச விசாரணை ஊடாக நீதி வழங்கப்படவேண்டும். மேலும் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். அதன் ஊடாக இந்த நாட்டில் நல்லிணக்கம் சாத்தியமாகும் என்றாா்